பி.வி.சிந்து முன்னேற்றம்
2022-06-30@ 03:04:48

கோலாலம்பூர்: மலேசியா ஓபன் சூப்பர் 750 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங்குடன் (10வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து (7வது ரேங்க்) 21-13, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 11-21, 17-21 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஐரிஸ் வாங்கிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 37 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய முன்னாள் காமன்வெல்த் சாம்பியன் பாருபள்ளி காஷ்யப் 21-12, 21-17 என்ற நேர் செட்களில் கொரியாவின் ஹியோ க்வாங்கை வீழ்த்தினார். அவர் அடுத்த சுற்றில் தாய்லாந்தின் குன்லாவுட் விதித்சர்னை சந்திக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத் ரெட்டி - அஷ்வினி பொன்னப்பா இணை 15-21, 21-19, 17-21 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் - செலினா ஜோடியிடம் 52 நிமிடம் போராடி தோல்வியைத் தழுவியது.
Tags:
பி.வி.சிந்து முன்னேற்றம்மேலும் செய்திகள்
துரந்தோ கோப்பை: பெங்களூர் வெற்றி
சில்லி பாய்ன்ட்....
புதுக் கேப்டன்கள் தலைமையில் ஜிம்பாப்வே- இந்தியா மோதல்
இளம்வீரர்களுடன் எனது அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்வேன்: தவான் பேட்டி
சின்சினாட்டி ஓபன் முதல் சுற்றில் ராடுகானு, ஹாலெப்,மெட்வெடேவ் வெற்றி
முதல் ஒருநாள் போட்டி; ஹராரே மைதானத்தில் நாளை இந்தியா-ஜிம்பாப்வே மோதல்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!