மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
2022-06-30@ 02:56:35

மதுராந்தகம்: முதுகரை கிராமத்தில் சேதமடைந்துள்ள ஏரியின் உபரிநீர் தடுப்பணையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் சிறுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது முதுகரை கிராமம். இங்கு, சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியால், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மழைக்காலங்களில் ஏரி முழுமையாக நிரம்பும்போது கிராமமக்கள் பாதுகாப்பு நலன் கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த உபரி நீரை தேக்குவதற்காக ஏரி பகுதி அருகே, கடந்த 6 வருடங்களுக்கு முன் தடுப்பணை அமைக்கப்பட்டது. இதனால், மழைக்காலங்களில் உபரிநீர் வீணாவது தடுக்கப்பட்டு அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. மேலும், அப்பகுதியை சுற்றியுள்ள குடிநீர் கிணறுகளில் நீர்மட்டமும் உயர்ந்து, பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாய் விளங்கியது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை சேதமடைந்தது. இதனால், மழையின்போது வெளியேறும் உபரிநீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும், ஏரியிலிருந்து தடுப்பணைக்கு செல்லும் கால்வாய் முற்றிலும் தூர்ந்துபோய் செடி, கொடிகள் புதர்போல் மண்டி உள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள், விவசாயம் செய்யமுடியாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருவதோடு, அப்பகுதி நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து உள்ளது. எனவே, பரவ மழை துவங்குவதற்கு முன்பாக பழுதாகி உள்ள தடுப்பணை மற்றும் உபரிநீர் செல்லும் கால்வாயில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!