உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி: ஜெலன்ஸ்கி சாடல்
2022-06-29@ 15:24:55

கீவ்: உக்ரைனின் கிரெமன்சுக் நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி என ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது அங்காடி மீது ரஷ்யா குண்டு வீசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் பல்பொருள் அங்காடி மீது குண்டு வீசியதால் அதை பயங்கரவாத நாடக அறிவிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மத்திய உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ரஷ்யா குண்டுவீசி தாக்கியதில் ஏராளமானோரை காணவில்லை என புகார் எழுந்துள்ளது.
2 நாட்களுக்கு முன் கிரெமன்சுக்கின் உள்ள பல்பொருள் அங்காடி மீது ஏவுகணைகளால் தாக்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். எனிமும் தங்கள் விமானங்கள் குண்டு வீசி தாக்கிய பல் பொருள் அங்காடி காலியாக இருந்தாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்ய போர் விமானம் வீசிய ஏவுகணை அங்காடி அருகே உள்ள ஆயுதக் கிடங்கையே தாக்கியதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள லிசிசான்ஸ் நகரில் நிலைமை மோசமாக உள்ளதாக பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.46 கோடியை தாண்டியது.! 64.53 லட்சம் பேர் உயிரிழப்பு
20 நொடிகளில் 15 முறை குத்திக்குத்து சல்மான் ருஷ்டிக்கு செயற்கை சுவாசம்: கண்பார்வை, பேச்சு பறிபோகும் அபாயம்
டிரம்ப் பங்களாவில் 11 ரகசிய ஆவணம்: எப்பிஐ சோதனையில் சிக்கின
முதல் முறையாக இந்தியாவில் பயிற்சிக்கு பாக். ராணுவம் வருகை
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி: தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
ரஷ்யா வசமுள்ள உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: ராணுவமற்ற பகுதியாக அறிவிக்க ஐ.நா. அவை வலியுறுத்தல்...
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!