கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் பிரபல தமிழ் திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்!!
2022-06-29@ 08:07:58

சென்னை : பிரபல தமிழ் திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 48. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாட்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். சென்னை கோட்டுர்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த வித்யாசாகருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும் பிந்தைய மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கு அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நடிகை மீனாவின் கணவர் மரணம் திரைத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பலரும் மீனாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். வித்யாசாகரின் உடல் இன்று கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
திரையரங்குகளில் வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்!: பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டம்..!!
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
முதலமைச்சர் உத்தரவு!: அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமிக்கு ஆக.22ம் தேதி அறுவை சிகிச்சை செய்ய முடிவு..!!
சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள சமையல் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து...
பைக் மீது அரசு பஸ் மோதி 2 ஐடி ஊழியர்கள் படுகாயம்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!