SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதுவரை இல்லாத அளவுக்கு சார்தாம் யாத்திரையில் 203 பக்தர்கள் உயிரிழப்பு: மோசமான வானிலை காரணம்

2022-06-29@ 00:01:33

டேராடூன்: இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்களுக்கு செல்வது சார்தாம் யாத்திரை எனப்படுகிறது. இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. இதுவரை 2 மாத யாத்திரையில் 2.5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் அதிகப்படியாக உயிரிழந்துள்ளனர். கடந்த 26ம் தேதி கணக்கெடுப்பின்படி, 203 பேர் யாத்திரையின் போது இறந்துள்ளனர். அதிகபட்சமாக கேதார்நாத்தில் 97 பேரும், பத்ரிநாத்தில் 51 பேரும், யமுனோத்திரியில் 42 பேரும், கங்கோத்ரியில் 13 பேரும் இறந்துள்ளனர். பெரும்பாலானோர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 2019ல் 90 பேரும், 2018ல் 102 பேரும், 2017ல் 112 பேரும் யாத்திரையின் போது இறந்துள்ளனர். மிக மோசமான வானிலையே உயிரிழப்புக்கு காரணம் என்று அம்மாநில அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்