வீட்டை உடைத்து 12 சவரன் திருட்டு
2022-06-28@ 01:32:42

வாலாஜாபாத்: வாலாஜாபாத் சேர்க்காடு பகுதி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தணிகை அரசு (47). இவர், குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் இரவு உறவினர் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்று நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அடுத்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், முன்கதவுகள் மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் 12 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
போலி நீதிமன்ற ஆணையுடன் பல்லடம் ஜவுளி நிறுவன அதிபரை கடத்த முயற்சி; ஆந்திர கும்பல் கைது-போலீஸ்காரர் உள்பட 3 பேரிடம் விசாரணை
பூவிருந்தவல்லி அருகே சொந்த வீட்டில் 500 சவரன் நகை திருட்டு: 2 பேர் கைது
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!: காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம்..எச்சரித்த வி.ஏ.ஓ. உதவியாளரை தாக்கிய தந்தை, மகன் கைது..!!
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது
லாட்ஜுக்கு வரவழைத்து மாணவியை பலாத்காரம் செய்த பிரபல டிக் டாக் நடிகர் கைது: செல்போனில் ஆபாச படங்கள், வீடியோக்கள் சிக்கின
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!