மகளிர் டி20 தொடர்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
2022-06-28@ 00:37:33

தம்புல்லா: இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி ஆறுதல் வெற்றிப் பெற்றது. இலங்கைச் சென்றுள்ள இந்திய மகளிர் அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்டி டி20 தொடரில் விளையாடியது. முதல் 2 ஆட்டங்களில் வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற் றியது.
இந்நிலையில் கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டம் நேற்று தம்புல்லாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய மகளிர் முதலில் களமிறங்கினர். கேப்டன் ஹர்மன்பிரீத் ஆட்டமிழக்காமல் 39*(33பந்து), ஜெமீமா 33(30பந்து) ரன் எடுக்க இந்தியா 20ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 138ரன்னை எட்டியது.
அதனையடுத்து 139ரன் எடுத்தால் ஆறுதல் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் களம் கண்டனர். ஒருக்கட்டத்தில் 5 ஓவரில் 2விக்கெட்களை இழந்து 37ரன் எடுத்து தடுமாறியது. ஆனால்கேப்டன் சமரி, நீலாக்ஷி இணையின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை 17ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த அணி 3 விக்கெட் மட்டும் இழுந்து 141ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. சமரி ஆட்டமிழக்காமல் 80*(48பந்து), நீலாக்ஷி 30ரன் எடுத்தனர். இந்த ஆறுதல் வெற்றியின் மூலம் இலங்கை, 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் தொடரை இழந்தது. இந்த 2 அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் ஜூலை ஒண்ணாம் தேதி பல்லேகலேவில் தொடங்குகிறது.
மேலும் செய்திகள்
டொரன்டோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சானியா இணை: ஜெசிகா, சிமோனா முன்னேற்றம்
சில்லி பாய்ன்ட்...
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி
இந்தியாவை எதிர்கொள்ள தயார்: ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவிட் சிறப்பு பேட்டி
உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை; ஸ்வியாடெக்கை விரட்டும் தோல்வி: மிரட்டிய ஹடாத் மியா
சர்வதேச கேரம் போட்டி: எல்லா தங்கங்களையும் வென்ற தமிழக வீரர்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!