மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடையில்லை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
2022-06-27@ 15:22:58

சென்னை: மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் ரூ.811 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக மாஜி அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்ததா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு வழக்கறிஞர், மனுவில் கூறப்பட்ட புகார்களில் முகாந்திரம் இல்லை என லஞ்சஒழித்துறை இயக்குனர் கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டதாக கூறினார்.
வழக்கை முடித்து வைப்பது என முடிவு செய்தபின் வழக்கு பதிந்தது தவறு என வாதிட்டார். உள்நோக்கத்துடன் வழக்கு பதியப்பட்டுள்ளதால் வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி வழக்குப்பதிவு செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை என தெரிவித்தார். இந்த வழக்குக்கு தடை விதிக்க மறுத்து வழக்கை ரத்து செய்யகோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 25ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
மேலும் செய்திகள்
அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நன்றி: அர்ச்சகர் சட்டம் நிறைவேற்றி ஓராண்டு நிறைவு
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணைகளை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ஊளையிடுவதால் உண்மையை மறைக்க முடியாது; கஞ்சா விற்பனை குறித்த எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!
சுதந்தர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!