உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி-திருப்பதியில் எஸ்பி தலைமையில் நடந்தது
2022-06-27@ 14:23:52

திருப்பதி : உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி நேற்று நடந்தது.திருப்பதியில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, காவல் துறை மற்றும் அமலாக்கப் பிரிவு சார்பில் திருப்பதி ஏர் பைபாஸ் சாலையில் உள்ள அன்னமய்யா ஜங்ஷன் முதல் எம்ஆர் பள்ளி ஜங்ஷன் வரை விழிப்புணர்வுப் பேரணி, மனிதச் சங்கிலி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி ஸ்ரீ.பி. பரமேஸ்வர ரெட்டி, கூடுதல் எஸ்பி சுப்ரஜா, அமலாக்கத்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி.சுவாதி ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.
அப்போது பேசிய திருப்பதி எஸ்பி பரமேஸ்வரர் ரெட்டி இளைஞர்கள் நாட்டின் உயிர்நாடி இவர்கள் எதிர்கால இந்தியாவை வழிநடத்த கூடியவர்கள்போதைப்பொருளில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும்.தாய்மார்கள் மற்றும் தந்தைகள் தங்கள் குழந்தைகளின் நடத்தையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், இதனால் அவர்கள் சரியான பாதையில் செல்ல முடியும் வாழ்க்கை சீராக அமையும் சமூகத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போதைப்பொருளை எதிர்க்க வேண்டும்.
முதன்மையாக மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்நிகழ்ச்சியில் காவல்துறை, எஸ்.இ.பி., அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு...
விற்பனையாகாததால் வேதனை சாலையில் டன் கணக்கில் தக்காளியை வீசிய விவசாயிகள்
75 வயது மாஜி ராணுவ வீரரின் 70 வயது மனைவிக்கு 54 ஆண்டுக்கு பின் ஆண் குழந்தை பிறந்தது: ராஜஸ்தானில் அதிசயம்
சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்: கேரள அரசு அறிவிப்பு
காஷ்மீர் நடிகையை கொன்ற 3 தீவிரவாதிகள் சிக்கினர்
பேய் பிடித்திருப்பதாக மந்திரவாதி கூறியதால் 5 வயது மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்: மூடநம்பிக்கையால் மகாராஷ்டிராவில் சோகம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!