கல்லூரி மாணவி கடத்தல்?
2022-06-27@ 01:17:24

திருவள்ளூர்: கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெண்மனம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு சதீஷ் (20) என்ற மகனும் ஜனனி (19) என்ற மகளும் உள்ளனர். ஜனனி சென்னையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரது தோழிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் மாணவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, கடம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை யாராவது கடத்திச் சென்றார்களா என்று விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை நடந்த 72 மணி நேரத்தில் 4 குற்றவாளிகளை கைது செய்து போலீஸ் அதிரடி..!
வடிவேலு பட பாணியில் ஓட்டி பார்ப்பதாக கூறி ஜீப் அபேஸ்
சின்னசேலம் பள்ளி கலவரத்தில் மாடுகளை திருடிய 3 பேர் கைது
திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸ் வாகனம் மீது தாக்குதல்
கடலூர் பாடலீஸ்வரர் கோயிலின் கோபுர உச்சியில் அனுமதியின்றி தேசியகொடி ஏற்றிய பாஜவினர்
பாரத மாதா கோயில் பூட்டை உடைத்த விவகாரம் பாஜ துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!