ரோஹித்சர்மாவுக்கு கொரோனா; கடைசி டெஸ்டில் களமிறங்குவது சந்தேகம்
2022-06-26@ 14:05:52

லண்டன்:இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஜூலை 1 முதல் 5ஆம் தேதி வரை டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கிடையில் இந்திய அணியினர் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் விளையாடி வருகிறார்கள். இந்த 4 நாட்கள் நடைபெறும் பயிற்சி டெஸ்ட் 3 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. பயிற்சி டெஸ்டிற்கு முன்பு விராட் கோஹ்லிக்கு கொரோனா உறுதியானது. இருப்பினும் அடுத்த நாளே நெகடிவ் என வந்ததால், வீரர்களுடன் இணைந்துகொண்டார். அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்தியாவில் விமான நிலைத்தில் கொரோனா உறுதியானதால், இங்கிலாந்து புறப்படவில்லை. இன்று (ஜூன் 26) கொரோனா டெஸ்ட் எடுக்கப்படும்.
இதில் நெகடிவ் என வந்தால் மட்டுமே, அவரால் இங்கிலாந்து புறப்பட்டு டெஸ்டில் பங்கேற்க முடியும். இந்நிலையில் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் பங்கேற்ற கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட ரேபிட் கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஹோட்டலில் அவர், தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணியுடன், இந்திய அணி பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
டொரன்டோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சானியா இணை: ஜெசிகா, சிமோனா முன்னேற்றம்
சில்லி பாய்ன்ட்...
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி
இந்தியாவை எதிர்கொள்ள தயார்: ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவிட் சிறப்பு பேட்டி
உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை; ஸ்வியாடெக்கை விரட்டும் தோல்வி: மிரட்டிய ஹடாத் மியா
சர்வதேச கேரம் போட்டி: எல்லா தங்கங்களையும் வென்ற தமிழக வீரர்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!