உக்ரைன் நோக்கி சென்ற ரஷ்ய விமானம் கீழே விழுந்து வெடித்து தீப்பிடித்தது 4 பேர் பலி
2022-06-25@ 19:39:23

மாஸ்கோ: உக்ரைன் நோக்கி சென்ற ரஷ்ய சரக்கு விமானம், கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். ரஷ்யாவின் ரியாசான் நகரில் எரிபொருள் நிரப்பி கொண்டு சரக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் 9 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக தரையில் மோதி விமானம் தீப்பிடித்தது. இதில் பயணித்த 9 பேரில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரியாசான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பின்புறம் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானம் விழுந்ததும் வெடித்து சிதறி தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. விமானம் பயிற்சியில் இருந்தபோது இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி இன்டர்பாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், விமான ஊழியர்களின் உயிரிழப்பு பற்றிய விவரங்களை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
மேலும் செய்திகள்
சீனாவில் பிறப்பு விகிதம் கடும் சரிவு!: அதிக குழந்தை பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி.. சீன அரசு அதிரடி அறிவிப்பு..!!
ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதிக்கும் வடகொரியா: ஒரே நாளில் 2 ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை
உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் குரங்கம்மை பாதிப்பு: தடுப்பூசிகளின் தேவை பன்மடங்கு அதிகரிப்பு.. WHO எச்சரிக்கை..!!
அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே?
சீனா - இலங்கை நட்பு பலப்படும்: சீன உளவு கப்பல் கேப்டன் கருத்து
நாங்களும் யூஸ் பண்ணுவோம்ல... குரங்குகளும் விதி விலக்கல்ல
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!