அக்கரம்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு சமையல் அறை கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
2022-06-25@ 01:45:00

ஊத்துக்கோட்டை: அக்கரபாக்கம் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு சமையல் கூட கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள அக்கரபாக்கம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 8 வரை அப்பகுதியில் உள்ள சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 110 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளிக்கூடத்தில் சமையல் கூடம் பழுதடைந்த நிலையில் உள்ளது.
சமையல் கூடம் இல்லாததால் அருகே உள்ள பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் சமையல் செய்து வருகின்றனர். மழைக்காலம் வந்துவிட்டால் தண்ணீர் உள்ளே வந்து அரிசி, பருப்பு, சமையல் பொருட்கள் சேதமடைகின்றன. மேலும் சமையல் செய்யவும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே புதிய சமையல் கூடம் கட்டடம் கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
ஷோ ரூமில் இருந்து ஓட்டி பார்ப்பதாக ஜீப்பை எடுத்துச் சென்ற நபர் எஸ்கேப்: “வடிவேலு காமெடி நிஜமானது’’
எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவச் சிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.!
மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட 13ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டுபிடிப்பு
சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை போக்குவரத்து மாற்றம்
மூவண்ணக் கொடியைப் போற்றுவோம்.! மூட அரசியல்தனத்தை அடக்குவோம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!