சவுடு மண் கடத்திய பாஜ பிரமுகர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
2022-06-25@ 01:43:57

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அனுமதியின்றி மண் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக உரிமையாளரான பாஜ பிரமுகரை கைது செய்தனர். பெரியபாளையம் அடுத்த சின்ன கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். பாஜ பிரமுகர். இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியபாளையம் போலீசாருக்கு சின்ன கிளாம்பக்கத்தில் உள்ள விளைநிலம் மற்றும் அருகாமையில் உள்ள அரசு நிலத்திலும் அனுமதியின்றி சவுடு மண் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் தரணி ஈஸ்வரி மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, அனுமதியின்றி 2 லாரிகள் மூலம் மணல் கடத்தி இருந்தது தெரியவந்தது. இதற்கு முன்னதாக, போலீசார் வருவதை கேள்விப்பட்ட மண் கடத்திய லாரி டிரைவர்கள் லாரியை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதனையடுத்து, 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து லாரியின் உரிமையாளர் சரத்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
ஷோ ரூமில் இருந்து ஓட்டி பார்ப்பதாக ஜீப்பை எடுத்துச் சென்ற நபர் எஸ்கேப்: “வடிவேலு காமெடி நிஜமானது’’
எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவச் சிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.!
மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட 13ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டுபிடிப்பு
சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை போக்குவரத்து மாற்றம்
மூவண்ணக் கொடியைப் போற்றுவோம்.! மூட அரசியல்தனத்தை அடக்குவோம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!