தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி: 10 தங்கம் உட்பட 22 பதக்கங்களை வென்ற தமிழக அணி
2022-06-23@ 15:56:17

சேலம்: தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில் தமிழக வீரர்கள் 10 தங்கம் உட்பட 22 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி கடந்த 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது.
20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் சேலத்தில் இருந்து 25 வீரர் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் தமிழக அணி வீரர்கள் 10 தங்கப் பதக்கங்கள் 6 வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஆறு வெண்கல பதக்கங்களை வென்று தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர். பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு சேலம் ரயில் நிலையத்தில் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பளித்தனர்.
மேலும் செய்திகள்
2020ல் விடுதி சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க கோரி முறையீடு: 8ம் தேதி விசாரணை
இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை
நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!