வீட்டில் பதுக்கிய 12 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
2022-06-23@ 15:04:35

வீதிருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செம்பட்டையன்கால் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வேட்டையாடப்பட்ட பன்றி இறைச்சி இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு, வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து கார்த்திக்கின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இதில் வீட்டின் மறைவில் பதுக்கி வைத்திருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் வேட்டையாடப்பட்ட பன்றி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் வெடிகுண்டு தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து 12 நாட்டு வெடிகுண்டுகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. இதனையடுத்து திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கார்த்திக்கை அழைத்து வந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடிதாக கார்த்திக் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டில் 12 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதிமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
நாட்டு வெடிகுண்டுகள்மேலும் செய்திகள்
2 பேரை கொல்ல சதி திட்டம் மாணவன் உள்பட 3 பேர் கைது: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை 3 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்காவில் 4 ஆண்டாக தலைமறைவான மோசடி மன்னன் பிடிபட்டார்
ஆவண மோசடி வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு ஓராண்டு சிறை
கல்லூரி விரிவாக்கத்திற்கு ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாக கல்லூரி தாளாளரிடம் ரூ.5.46 கோடி மோசடி போலி பைனான்சியர் உள்பட 3 பேர் கைது
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர் கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகர் மீது போலீசில் பரபரப்பு புகார்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!