சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
2022-06-23@ 00:40:05

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறை ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. அதில்,கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் படுவதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக புகார்கள் வந்தது. அரசாணையின்படி அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று அரசு உத்தரவிட்ட நாளிலிருந்து கோயிலில் போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கடிதத்தால் நேற்று முதல் கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட போலீசார் கோயிலின் கனகசபை பகுதி, உள் பிரகாரம், வெளி பிரகாரம், நுழைவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:
Chidambaram Natarajar Temple Police Security Increase சிதம்பரம் நடராஜர் கோயில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்புமேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!