ரூ.34,615 கோடி கடன் மோசடி டிஎச்எப்எல் முன்னாள் சிஇஓ, இயக்குநர் மீது சிபிஐ வழக்கு
2022-06-23@ 00:20:08

புதுடெல்லி: யூனியன் வங்கியில் ரூ.34,615 கோடி பெற்று கடன் மோசடியில் செய்த வழக்கில் டிஎச்எப்எல் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி, இயக்குநர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்பரேஷன் லிமிடெட் (டிஎச்எப்எல்) நிறுவனத்துக்கு யெஸ் வங்கி ரூ.3,000 கோடி கடன் வழங்கியது. இதற்கு கைமாறாக, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், அவரது மனைவி, 3 மகள்கள் வங்கி கணக்குகளில் ரூ.600 கோடி பணம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பாக கபில் வதாவன், தீரஜ் வதாவன் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ அவர்களை கடந்த 2020 ஏப்ரலில் கைது செய்தது. இந்நிலையில், யூனியன் வங்கியில் ரூ.34,615 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக டிஎச்எப்எல் முன்னாள் தலைமை நிர்வாகி கபில் வதாவன், இயக்குநர் தீரஜ் வதாவன் மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. மேலும், இந்த கடன் தொகை பெற உதவியதாக 6 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீதும் யூனியன் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிந்துள்ளது. இதுவே, சிபிஐ விசாரிக்கும் அதிகபட்ச வங்கி கடன் மோசடி வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Former DHFL CEO director CBI probe into Rs 34 615 crore loan scam ரூ.34 615 கோடி கடன் மோசடி டிஎச்எப்எல் முன்னாள் சிஇஓ இயக்குநர் சிபிஐ வழக்குமேலும் செய்திகள்
சிரஞ்சீவியின் காட்ஃபாதர் வீடியோ ரிலீஸ்
பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம் இயக்குனர் லீனா மீது நடிகை கடும் தாக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம்
பவன் கல்யாண் பெயரை பச்சை குத்திய நடிகை
அல்லு அர்ஜுனுடன் இணைகிறார் விஜய் சேதுபதி
துணை ஜனாதிபதி தேர்தல் மனுதாக்கல் தொடங்கியது: ஆக.6ம் தேதி வாக்குப்பதிவு
குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர் தாயை 56 ஆயிரம் கிமீ ஆன்மிக பயணம் அழைத்து செல்லும் மகன்: திருப்பதியில் சுவாமி தரிசனம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!