புல்வாமாவில் இன்று காலை தீவிரவாதி பலி; 18 மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.!
2022-06-20@ 14:49:17

புல்வாமா: புல்வாமாவில் இன்று காலை ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கடந்த 18 மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு - காஷ்மீரில் கடந்த 18 மணி நேரத்தில் நடந்த 3 என்கவுன்டர் சம்பவங்களில் 7 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். லோலாப் குப்வாரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் மொத்தம் 4 லஷ்கர் தீவிரவாதிகளும், டிஹெச் போரா குல்காம் என்கவுன்டரில் 2 ஜெய்ஷ் தீவிரவாதிகளும், சத்போரா புல்வாமா என்கவுண்டரில் ஒரு லஷ்கர் தீவிரவாதியும் கொல்லப்பட்டான்.
அந்த வகையில் இன்று காலை சத்போரா பகுதியில், பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அப்போது என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை வெளியிட்ட பதிவில், ‘புல்வாமா அடுத்த சத்போரா பகுதியில் நடந்த என்கவுன்டர் சம்பவத்தில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது அடையாளம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!