நீர்வரத்து 11,000 கனஅடியாக அதிகரிப்பு ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் சவாரிக்கு தடை
2022-06-19@ 00:39:10

பென்னாகரம்: கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 11,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால், அருவிகளில்வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,661 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 5,894 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 110.77 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 110.20 அடியானது.
Tags:
Aqueduct 11 000 cubic feet augmentation organelle gift ride barrier நீர்வரத்து 11 000 கனஅடி அதிகரிப்பு ஒகேனக்கல் பரிசல் சவாரி தடைமேலும் செய்திகள்
பழைய பாலம் கடும் சேதம் பாம்பன் புதிய பாலத்தில் இனி ரயில்கள் இயங்கும்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்
வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநிலத்தவர்கள் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்: கிருஷ்ணகிரி எஸ்பி பேட்டி
தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் பழநி கோயிலில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்: பறவைக்காவடி எடுத்து வந்து பரவசம்
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தில் முதல் அதிரடி அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை: மலைக்கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும்திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் நேரில் ஆய்வு
வரும் 28ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்: பொதிகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் மதுரை, திண்டுக்கல் செல்லாது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!