கருமுட்டை விற்பனை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு: கமல்ஹாசன் வலியுறுத்தல்
2022-06-08@ 04:02:55

சென்னை: கருமுட்டை விற்பனை தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பல ஆண்டுகளாக கருமுட்டை எடுக்கப் பயன்படுத்தி, அதைத் தனியார் மருத்துவமனைகள் மூலம் விற்பனை செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திராவில் உள்ள மருத்துவமனைகளுக்கும் கருமுட்டை விற்றுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். இனியும் இதுபோல நிகழாமல் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கமலஹாசன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
3 வது பேனர் மாற்றம் அடி... இடி மாறி விழுந்து இருக்கு போல!
வேட்டியை மடிச்சு கட்டினா... அன்புமணி எச்சரிக்கை
‘இரட்டை இலை எங்ககிட்டதான் இருக்கு’ ஓபிஎஸ் அணி
ரூ.3,690 செருப்பு என்னுது... இந்தா பிடிங்க பில்லு...
பெரியார் மண் விற்பனைக்கு அல்ல: ஈரோட்டை கலக்கும் போஸ்டர்
தவில் இசைத்து அமைச்சர் பிரசாரம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!