உம்ரான் பந்துவீச்சை எதிர்கொள்ள பயமா?..தெ.ஆ.கேப்டன் பவுமா பேட்டி
2022-06-01@ 15:19:56

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் போட்டி டெல்லியில் வரும் 9ம்தேதி தொடங்குகிறது. இதற்கான தென்ஆப்ரிக்கா அணி நாளை டெல்லி வருகின்றது.
இதனிடையே இந்தியா புறப்படும் முன் தென்ஆப்ரிக்கா கேப்டன் பவுமா கூறியதாவது : உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு ஒரு அற்புதமான வேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு சிறந்த பந்துவீச்சாளர்களை கண்டுபிடிக்க முடிகிறது. தென்ஆப்பிரிக்காவில் நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு வளர்கிறோம். ஆனால் எந்த ஒரு பேட்டரும் 150 கிமீ வேகத்தில் பந்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் முடிந்தவரை நாங்கள் அதற்கு தயாராகி உள்ளோம். 150 கிமீ வேகத்தில் பந்து வீசும் வீரர்களும் எங்களிடம் உள்ளனர். உம்ரான் மாலிக் டீம் இந்தியாவிற்கு ஒரு சிறப்பு திறமை வாய்ந்தவர், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது ஐபிஎல் செயல்திறனைப் பின்பற்ற முடியும் என்று நான் நம்புகிறேன், என்றார்.
மேலும் செய்திகள்
ரஞ்சி கோப்பை காலிறுதி சவுராஷ்டிரா 303 ரன் குவிப்பு: பார்த் பட் அபார சதம்
சில்லி பாயின்ட்...
கடைசி டி20ல் இன்று இந்தியா - நியூசி. மோதல்: தொடரை வெல்லப் போவது யார்?
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கேமரூன் கிரீன் இடம்பெறுவார்; மிட்செல் ஸ்டார்க் சந்தேகம்.! ஆஸி. பயிற்சியாளர் தகவல்
இன்னும் 2 ஆண்டுகள் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்துவார்: பயிற்சியாளர் இவானிசெவிச் நம்பிக்கை
உலக வரலாற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முயற்சி: ஆன்லைன் மூலம் அணியை பயிற்சியாளர் வழி நடத்த முடியுமா? ஷாகித் அப்ரிடி சாடல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!