லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
2022-05-27@ 20:03:50

லே: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக்கில் பேருந்து விபத்திற்குள்ளானதில் நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் 26 பேரை ஏற்றி சென்ற வாகனம் லடாக் அருகே சாலையில் இருந்து தடுமாறி ஷீயாக் நதியில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து ராணுவ அதிகாரி கூறுகையில் பர்தாபூர் முகாமிலிருந்து 26 வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனம் ஒஹனிப் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்து ஷீயாக் நதியில் 50 அடி ஆழத்தில் விழுந்ததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த வீரர்கள் பர்தாபூரில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றத்தை நாட போலீசார் முடிவு
பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி
மருத்துவமனைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற நாய்
நாளை தொடங்கி 43 நாட்கள் நடக்கிறது பக்தர்கள் வருகையால் அமர்நாத் யாத்திரை விழாக்கோலம் பூண்டது பலத்த போலீஸ் பாதுகாப்பு
100வது நாளை எட்டும் உ.பி. அரசு இலக்குகளை அடைய அமைச்சர்களுக்கு யோகி உத்தரவு
காத்மாண்டில் பானிபூரிக்கு தடை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;