பிரதமரின் வருகையால் தமிழகத்துக்கு பல நன்மை கிடைக்கப்போகிறது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை
2022-05-26@ 00:14:26

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகையில் பல்வேறு நன்மைகள் கிடைக்கப் போகிறது. பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இது மேலும் இரு மடங்காக உயரக்கூடிய நிலையில் உள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் கோடிக் கணக்கான பணத்தை சரக்கு போக்குவரத்திற்காக செலவழிக்கின்றனர். எனவே தயாரிப்பாளர்களின் சுமையைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க புதிய கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. அதி விரைவு சக்தி என்ற தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக 35 பன்முனை சரக்கு பூங்காக்களை நாடு முழுக்க அமைக்கப்பட உள்ளது. இதனால் சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் அமைகின்ற பூங்கா மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:
Prime Minister's visit to Tamil Nadu many benefits Tamil Nadu BJP leader's statement பிரதமரின் வருகை தமிழகத்துக்கு பல நன்மை தமிழக பாஜ தலைவர் அறிக்கைமேலும் செய்திகள்
அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா: அதிமுக உச்சகட்ட உள்கட்சி பூசலுக்கு இடையே பயணம்..!
என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!
சாதி ரீதியாக அதிமுகவினரை பிரிக்க முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி
சொல்லிட்டாங்க...
முதல்வரின் முதன்மை திட்டம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!