பிலிப்பைன்சில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் படகு: 7 பேர் பலி
2022-05-24@ 00:05:16

மணிலா: பிலிப்பைன்சில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்த விபத்தில் 7 பேர் தீயில் கருகி பலியாகினர். கடலில் தத்தளித்த 120 பயணிகளை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.பிலிப்பைன்ஸ் நாட்டில் பொலிலியோ தீவிலிருந்து கசோன் மாகாணத்தில் உள்ள ரியல் நகரத்தில் உள்ள துறைமுகத்தை நோக்கி மெர்கிராப்ட்-2 படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 134 பேர் பயணம் செய்தனர். அப்போது படகின் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு தீ பிடித்தது. இந்த தீ, படகு முழுவதும் மளமளவென பரவியது. இதனால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
இந்த விபத்தில் 7 பேர் தீயில் கருகி பாிதாபமாக உயிாிழந்தனர். உயிர் தப்பிக்க கடலில் குதித்து தத்தளித்த 120க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த துறைமுக அதிகாாிகள் படகில் இருந்தவா்களை வேறு படகுகள் முலம் மீட்டு கரைக்கு அழைத்து சென்றனர். இந்த தீ விபத்தில் 4 பேரை காணவில்லை என அதிகாரிகள் தொிவித்தனா்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல் போராட்டம்
இங்கிலாந்தில் 1,076 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி: ஜெலன்ஸ்கி சாடல்
கனடாவில் பயங்கரம்; வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை: போலீசார் அதிரடி
கொலம்பியா நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி உயிரிழப்பு..பலருக்கு பலத்த தீக்காயம்!!
லாரியில் அடைக்கப்பட்ட 51 அகதிகள் மூச்சுத் திணறி பலியான சம்பவம்... இதயத்தையே நொறுக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வேதனை!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!