கத்தியை காட்டி வழிப்பறி: வாலிபர் கைது
2022-05-24@ 00:04:28

திருவள்ளூர்: திருமழிசையை சேர்ந்தவர் மணிகண்டன், பாப்பன்சத்திரத்தில் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது உட்கோட்டை பகுதியை சேர்ந்த அஜித், மணிகண்டனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போன் மற்றும் ₹1000த்தை பறித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து மணிகண்டன் வெள்ளவேடு போலீசில் புகாரளித்தார். அதன்படி பூந்தமல்லி போலீஸ் துணை ஆணையர் முத்துப்பாண்டியன் உத்தரவின்பேரில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து உட்கோட்டை பகுதியை சேர்ந்த அஜித்(29) என்பவரை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். ஏற்கனவே அஜீத் மீது 4 வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: தி.மலை போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பு
ஆசைவார்த்தை கூறி பணம் பறிப்பு; திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பெண்ணின் கணவருக்கு ஆபாச வீடியோ: மனைவியை பிரிந்த வாலிபர் கைது
வியாசர்பாடி பகுதியில் கஞ்சா; புகைத்த 3 பேர் கைது
குடந்தை அருகே பதுக்கி வைத்திருந்த உலோக சாமி சிலைகள், பாவை விளக்குகள் மீட்பு: 2 பேர் கைது
வேலூர் அருகே காதலி மீது சந்தேகம் அடைந்து அவரை கத்தியால் குத்திய காதலன் கைது
நாகை அருகே இரு மீனவ கிராமங்கள் இடையே கடும் மோதல்: 2 கிராமங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!