திருமணமான ஒன்றரை ஆண்டில் புதுப்பெண் தற்கொலை: போலீசில் தந்தை புகார்
2022-05-24@ 00:00:41

பெரம்பூர்: கொடுங்கையூர் எழில் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (25), இன்ஜினியர். இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகள் காவியாவுக்கும் (19), கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காவியா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், காவியாவுக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆனதும், அதனால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் சிரஞ்சீவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவியாவின் தந்தை ரவி கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாதவரத்தில் 30 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
தண்டலம் ஊராட்சியில் செங்கல்பட்டு கலெக்டர் திடீர் ஆய்வு
தீவிரவாதம், போதை பொருள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் 48 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை; ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு
காய்கறி செடி விநியோகம்
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர மீண்டும் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!