பெண்ணை சரமாரி தாக்கி வீட்டை அபகரிக்க முயன்ற ரவுடி உள்பட 2 பேர் கைது
2022-05-24@ 00:00:34

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையை சேர்ந்தவர் வசந்தா (25). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வசந்தா வீட்டிற்கு வந்த 2 பேர், ‘நாங்கள் இந்த வீட்டை விலைக்கு வாங்கி விட்டோம். எனவே, நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர். அதற்கு வசந்தா, நாங்கள் முறையாக வாடகை மற்றும் மின்சார கட்டணம் கொடுத்து வருகிறோம். வீட்டை காலி செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும், உருட்டுக்கட்டையால் வசந்தாவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வசந்தா புகார் அளித்தார். விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த மோகன் (எ) தர்கா மோகன் (57), தனது மருமகன் தினேஷ் (35) என்பவருடன் சேர்ந்து, அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது. மேலும், தர்கா மோகன் மீது கொலை உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அந்த இருவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: தி.மலை போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பு
ஆசைவார்த்தை கூறி பணம் பறிப்பு; திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பெண்ணின் கணவருக்கு ஆபாச வீடியோ: மனைவியை பிரிந்த வாலிபர் கைது
வியாசர்பாடி பகுதியில் கஞ்சா; புகைத்த 3 பேர் கைது
குடந்தை அருகே பதுக்கி வைத்திருந்த உலோக சாமி சிலைகள், பாவை விளக்குகள் மீட்பு: 2 பேர் கைது
வேலூர் அருகே காதலி மீது சந்தேகம் அடைந்து அவரை கத்தியால் குத்திய காதலன் கைது
நாகை அருகே இரு மீனவ கிராமங்கள் இடையே கடும் மோதல்: 2 கிராமங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!