கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் உயிரிழப்பு: பல லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு.. மக்கள் தவிப்பு..!!
2022-05-23@ 10:23:57

ஒட்டாவா: கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் உயிரிழந்த நிலையில், பல லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். கெனடாவின் கிழக்கு மாகாணங்களான ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கடுமையான புயல் தாக்கியது. மேலும் இடி, மின்னலுடன் பலத்தை மழையும் பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தன. மரங்கள் அனைத்தும் வோரோடு சாய்ந்தது. கார் உள்ளிட்ட வாகனங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தன.
பல இடங்களில் கார்கள் மீது மரங்கள் விழுந்து நசுங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலால் சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் இருளில் தவித்தனர். புயல், மழை தொடர்பான விபத்துகளில் 4 பேர் பலியான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கி விட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டலின் கண்டுபிடிப்பு..!!
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பின பெண் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்!!
ஜி-7 நாட்டு தலைவர்கள் துணியின்றி இருந்தால் பார்க்கவே சகிக்காது; புடின் பதிலடி
நைஜீரியாவில் பஸ் எரிந்தது 5 பேர் உடல் கருகி பலி
பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு நெகடிவ் வந்தால் ரோகித் களம் இறங்க வாய்ப்பு; பயிற்சியாளர் டிராவிட் கருத்து
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல் போராட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்