பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது: அண்ணாமலை பேட்டி
2022-05-23@ 05:42:31

சென்னை,: பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது என தமிழகபாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஒன்றிய அரசு குறைத்து இருக்கிறது. இதற்கு முன்பு நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு விலை குறைத்து இருக்கிறது. இந்த 6 மாத காலத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.14.50 ஆக குறைத்து
இருக்கிறது. அதேபோல் டீசல் விலையை ரூ.17 ஆக குறைத்து இருக்கிறார்கள். சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி சாதாரண மக்களுக்காக இதை செய்து கொண்டு இருக்கிறார். இரண்டாவது, 9 கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் ரூ.200 சிலிண்டருக்கு மானியம், அறிவித்து இருக்கிறார்.
எனவே, மாநில அரசு தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறைக்கவில்லை என்றால் பாஜ தொண்டர்கள் கோட்டையை முற்றுகையிட தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
உருண்டு புரண்டு அண்ணாமலை வந்தாலும் பாஜ மீதான மக்கள் கோபம் கடுகளவும் குறையாது: கே.எஸ்.அழகிரி ஆவேசம்
அரசியலில் இருந்து ஜாதிக்கு மாறினர்: சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பரபரப்பு போஸ்டர்
எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைவர் கிடையாது.. அதிமுகவில் நடக்கும் சதிக்கும் துரோகத்திற்கும் பழனிசாமியே காரணம் : கோவை செல்வராஜ்
மக்களைத் தேடிப் பயணிப்போம், மக்களின் குறைகளைத் தீர்ப்போம் ... திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ போராட்டம்: சென்னையில் அண்ணாமலை பங்கேற்பு
சொல்லிட்டாங்க...
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!