சட்ட விரோதமாக நுழைந்த வழக்கு மெகுல் சோக்சி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது டொமினிகா நீதிமன்றம்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கல்
2022-05-23@ 00:18:05

புதுடெல்லி: வங்கி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட வைர வியாபாரி மெகுல் சோக்சி, சட்ட விரோதமாக டொமினிகாவுக்குள் நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்சி மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் கரீபியன் தீவு நாடான டொமினிகாவுக்கு சட்ட விரோதமாக சென்றதாக மெகுல் சோக்சி கைது செய்யப்பட்டார். 51 நாள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, மெகுல் சோக்சியை டொமினிகாவிலிருந்து இந்தியா அழைத்து வர தனியார் விமானம் மூலம் இந்திய அதிகாரிகள் தயார்நிலையில் இருந்தனர். ஆனால், சோக்சியை இந்திய உளவாளிகள் தான் ஆன்டிகுவாவிலிருந்து டொமினிகாவிற்கு கடத்தியதாக அவரது வக்கீல் நீதிமன்றத்தில் வாதாடினார். இந்நிலையில், டொமினிகாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக சோக்சி மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கையையும் ரத்து செய்வதாக கடந்த 20ம் தேதி டொமினிகா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக சோக்சியின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார். இதனால் சோக்சியை இந்தியா அழைத்து வருவதில் மீண்டும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Tags:
Illegal entry case Miguel Choksi indictment quashed Dominica court சட்ட விரோதமாக நுழைந்த வழக்கு மெகுல் சோக்சி குற்றச்சாட்டை ரத்து டொமினிகா நீதிமன்றம்மேலும் செய்திகள்
உ.பி.யில் தொட்டாலே சரிந்து விழும் செங்கல் சுவர்: யோகி அரசியலில் அடிமட்டம் வரை ஊழல் என அகிலேஷ் யாதவ் விமர்சனம்
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 15,940ஆக குறைந்தது... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!!
வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை
ராமர் வேடத்தில் நடிக்க ரூ120 கோடி சம்பளம் கேட்கும் பிரபாஸ்
படப்பிடிப்பின்போது மாரடைப்பு: மலையாள நடிகர் காலித் மரணம்
பேச்சுவார்த்தையில் சுமூகம்: தெலுங்கு சினிமா தொழிலாளர் ஸ்டிரைக் வாபஸ்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!