பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இந்தியாவுக்கு இம்ரான் மீண்டும் பாராட்டு மழை
2022-05-23@ 00:17:36

இஸ்லாமாபாத்: இந்தியாவில்பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 எனவும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6 எனவும் ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டரில், இந்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான விலைக் குறைப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் தெற்கு ஆசியா குறியீட்டு எண் அறிக்கையை டேக் செய்துள்ளார். அதில், ‘குவாட் நாட்டில் உறுப்பினராக இருந்த போதிலும், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தது. இது போன்றதொரு சுதந்திரமான வெளியுறவு கொள்கையை தான் தனது தலைமையிலான அரசு மேற்கொள்ள இருந்தது. ஆனால், அதற்குள்ளாக ஆட்சி மாற்றத்துக்காக வெளிநாட்டின் அழுத்தத்திற்கு உட்பட்டு காட்டி கொடுக்கப்பட்டது. ,’ என்று கூறியுள்ளார். இம்ரான் கான் இதற்கு முன்பு, `இந்தியா மிகவும் மதிப்புக்குரிய நாடு’, என்றும் உக்ரைன் போரில் ரஷ்யா மீதான இந்தியாவின் நிலைப்பாடு மக்கள் நலன் சார்ந்தது என்று இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பாராட்டினார்.
Tags:
Petrol diesel prices cuts India Imran again showers of praise பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இந்தியா இம்ரான் மீண்டும் பாராட்டு மழைமேலும் செய்திகள்
அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுவதால் ஒரே நாளில் 2 அமைச்சர்கள் ராஜினாமா: இங்கிலாந்து பிரதமருக்கு கடும் நெருக்கடி
நைட் கிளப்பில் பாலியல் ரீதியாக அநாகரீகம் : ராஜினாமா செய்த 2 அமைச்சர்கள்.. புது அமைச்சர்களை நியமித்து இங்கிலாந்து பிரதமர் அதிரடி
ஏமன் நாட்டில் ராணுவ ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து... 10 பேர் பலி.. 45 பேர் படுகாயம்!!
அரசியல் எனக்கு ஒத்துவராது அக்ஷய் குமார் கருத்து
2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கும் சீனா: இந்தியாவுக்கு அனுமதியில்லை
ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல் கையெழுத்து
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!