அரிசி, மண்ணெண்ணை கடத்தல் தடுப்பால் ரூ.2,630 கோடி சேமிப்பு; அமைச்சர் சக்கரபாணி தகவல்
2022-05-22@ 19:58:05

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உணவு பொருள் விநியோகம் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை ரீதியிலான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்கொள்முதல் நிலையங்கள் மூலமாக தமிழகத்தில் இதுவரையில் 35.35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. புதியதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாளில் ரேஷன் அட்டை வழங்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இதுவரையில் 11.47 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டறிந்து நீக்கப்பட்டுள்ளது. 12 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரிசி, மண்ணெண்ணெய் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலமாக ரூ.2,630 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து வெளியே வரும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை சோதனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரிசியை 5 முதல் 20 கிலோ பைகளில் வழங்கவும், பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை பொட்டலமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயோ மெட்ரிக் முறைக்கு மாற்றாக கண் விழிரேகை மூலமாக பொருள் வழங்கிட தேர்வு செய்யப்பட்ட மாவட்டத்தில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளோம். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாஜி எம்எல்ஏவின் மகனுக்கு போலீஸ் வலை
கரூர் திருமாநிலையூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள தனிவிமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதல்வர் முக.ஸ்டாலின்
சாத்தான்குளம் அருகே விஷம் வைத்து 20 கோழிகள் சாகடிப்பு
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருவேங்கடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ராஜபாளையம் தொகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காட்பாடியில் சீரமைப்பு பணி முடிந்தது ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்