மீன் பிடி தடை காலம், கேரள மீன் வரத்து குறைவு எதிரொலி: மீன்கள் விலை கிடுகிடு உயர்வு,
2022-05-22@ 17:29:43

தொடர்மலை மீன்பிடி தடை காலம் கேரள மீன் வரத்து குறைவால் கோவையில் மீன்கள் வில்லை அதிகரிதுள்ளது, கோயம்பத்தூர் லாரிப்பேட்டை மீன் சந்தைக்கு மீன்கள் வரத்து குறைந்துள்ளது, 10 லாரிகள் வரவேண்டிய இடத்தில் 3 லாரி மீன்களே வந்துள்ளன இதனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்கள் விலை கிடுகிடு என உயர்ந்து காணப்படுகிறது. வஞ்சிரம் மீன் சென்ற வரம் கிலோ ரூ.800 முதல் 900 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.1300 முதல் 1400க்கு வரை அதிகரித்து விற்கப்படுகிறது.
வவ்வால் மீன் கிலோ ரூ. 700க்கு முதல் 800 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ 1000 க்கு விற்கப்படுகிறது, இயிலை, மாத்தி, நெத்திலி உள்ளிட்ட அனைத்து மீன்களும் வழக்கத்தைவிட அதிகப்படியான விலை உயர்வினால் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் குறைத்த அளவில் மீன்களை வாங்கி சென்றனர், மீன்பிடி தடை காலம் நீடித்துவருவதால் தான் சென்னை காசிமேட்டிலும் பெரிய வகை மீன்ளுக்கு தட்டுப்பாடு நிலவியது ஞாயிறுகிழமை என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் எராளமானோர் காசிமேடு மீன் பிடி சந்தைக்கு மீன்களை வாங்க வந்து குவிந்தனர். இதனால் வழக்கத்தைவிட மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
சிறிய வகை வஞ்சிரம் கிலோ ரூ. 700 க்கு விற்பனைசெய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ. 1300 க்கு விற்பனை செய்யப்படுகிறது சங்கரா மீன் கிலோ ரூ .400க்கு இருந்து ரூ. 800 க்கு விற்பனையாகிறது, கிலோ ரூ. 700க்கு விற்கப்பட்ட வவ்வால் ரூ. 1200 ஆக உயந்துள்ளது. பாறை கிலோ ரூ. 600 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ. 1100 க்கு விற்பனையாகிறது கிலோ ரூ. 400 க்கு விற்கப்பட்ட இறால், ஒரு மடங்கு உயர்ந்து கிலோ ரூ. 800 க்கு விற்பனையாகிறது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது : ஐகோர்ட் அதிரடி
சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது... நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூலை 4ல் விசாரணை: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!!
மின் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுங்கள்... பொறியாளர்கள், ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு!!
சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!