கோடை மழை எதிரொலி சோலையார் அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்வு
2022-05-22@ 11:08:33

வால்பாறை: வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தேயிலைத் தோட்டங்கள், வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பியது. மழையின் காரணமாக சோலையார் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள பி.ஏ.பி பாசனத் திட்ட அணைகள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நீர்மட்டம் கணிசமாக குறைந்து காணப்பட்டது. மே மாதம் 1ம் தேதி 165 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 25.5 அடியாகவும், 15ம் தேதி 27 அடியாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 32.2 அடியாக இருந்த சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து, நேற்று காலை நிலவரப்படி 42 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,090 கன அடியாக உள்ளது. இதனால் பரம்பிக்குளம் பாசன திட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறை பகுதியில் அதிகபட்சமாக வால்பாறையில் 78 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சின்னக்கல்லாறு 74, கீழ்நீராறு 70, சோலையார் அணையில் 64 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு
அரியலூரில் விமானம் விழுந்ததாக வதந்தி
திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா; கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு, ஆம்னி பஸ் எரிந்து சேதம்; பயணிகள் உயிர் தப்பினர்
ராஜபாளையத்தில் அதிகாலை பரபரப்பு ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம்!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;