அரியலூர் அருகே புதுக்கோட்டையில்; ஜல்லிக்கட்டு: 668 காளைகள் சீறிப்பாய்ந்தன: 32 பேர் காயம்
2022-05-22@ 11:02:17

அரியலூர்: திருமானூர் அருகே நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 668 காளைகள் பங்கேற்றன. 32 பேர் காயமடைந்தனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் அரியலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 668 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 340 பேர் 6 குழுக்களாக அனுமதிக்கப்பட்டனர்.வாடிவாசலிலிருந்து சீறி வந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், ஜல்லிக்கட்டை காண வந்த பார்வையாளர்கள் என 32 பேர் காயமடைந்தனர். இதில், படுகாயமடைந்த சேலம் மாவட்டம் தடாவூர் ராஜா மகன் சண்முகம்(21), புள்ளம்பாடி மணிராஜ் மகன் மகேஷ்(32), புதுக்கோட்டை செல்லையா மகன் அடைக்கலம்(40), சுந்தரம் மகன் ராஜா(25) உட்பட 7 பேர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழு சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!