உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
2022-05-22@ 10:21:35

சென்னை: வரியை உயர்த்திய போது மாநில அரசுகளுக்கு தெரிவிக்காத மத்திய அரசு, குறைக்கும் போது மாநில அரசுகளை அறிவுறுத்துவது தான் கூட்டாட்சி தத்துவமா? என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
2014ம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான வரியை 250 சதவிகிதம் அதாவது 23 ரூபாயும், டீசல் மீதான வரியை 900 சதவிகிதம் அதாவது 29 ரூபாயும் ஒன்றிய அரசு உயர்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது, வெறும் 50 சதவிகிதம் மட்டும் வரியை குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதுதான் கூட்டாட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகள்
தண்டலம் ஊராட்சியில் செங்கல்பட்டு கலெக்டர் திடீர் ஆய்வு
தீவிரவாதம், போதை பொருள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் 48 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை; ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு
காய்கறி செடி விநியோகம்
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர மீண்டும் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்
ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரருக்கு பணிக்கொடையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!