ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தவர் பலி
2022-05-22@ 02:10:59

தண்டையார்பேட்டை: செங்குன்றத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை மாநகர பஸ் (தடம் எண் 157) திருவொற்றியூர் புறப்பட்டது. தண்டையார்பேட்டை, இளையமுதலி தெரு வழியாக பஸ் சென்றபோது, போதையில் பஸ்சில் பயணித்த ஒருவர், முன்புற படிக்கட்டில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி அவரது 2 கால்களும் நசுங்கியதால், ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், அந்த நபரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரை சேர்ந்த ரமேஷ் (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஊஞ்சல், தேன் சிட்டு இதழ் திட்டத்திற்கு ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு: சென்னை காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்
தமிழ்நாடு அரசின் தாய் - சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அவகாசம்
தமிழக விமானநிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை 19 லட்சமாக அதிகரிப்பு
இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!