சிறுமிகளை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு குண்டாஸ்
2022-05-22@ 02:09:29

சென்னை: சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த ஜெயசூரியா (24), அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து, கடந்த மாதம் 24ம் தேதி அரும்பாக்கத்தில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலை போலீசார், ஜெயசூரியாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில், ஜெயசூரியா இதேபோல், ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து, கடத்தி பலாத்காரம் செய்ததும், இதுதொடர்பாக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் இவர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. எனவே, இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மகளிர் போலீசார், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், காவல் ஆணையர் ஜெயசூரியாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் ஜெயசூரியாவை குண்டாசில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
செங்கல்பட்டு அருகே பெண்ணை கடத்தி, மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
பந்தலூர் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையன் கைது
கடன் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு மனைவியை தகாத வார்த்தையால் பேசியதால் வாலிபரை கொலை செய்தோம்-கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நடந்த 83 பவுன் தங்க நகை கொள்ளையில் 2 தனிப்படைகள் விசாரணை-கைரேகைகள் சிக்கின
அண்ணாசாலையில் பைக்கில் சென்றவரை வழிமறித்து ரூ.20 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!