முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு: நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதினர்
2022-05-22@ 02:06:25

சென்னை: நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுவதும் 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 2022-23ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர். இதற்காக, 256 தேசிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், தேனி, விழுப்புரம், ஈரோடு, கரூர், விருதுநகர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சை, ராமநாதபுரம், பெரம்பலூர், நாமக்கல், நாகர்கோவில், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு நடந்தது.
மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அடையாள அட்டை மற்றும் புகைப்படம் பொருந்திய பான் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டையுடன் வந்திருந்தனர். கைக்கடிகாரம், மொபைல், கால்குலேட்டர் போன்றவற்றுக்கு தடை செய்யப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருந்தனர். 800 மதிப்பெண்ணுக்கு 200 கேள்விகள் என முதுநிலை நீட் தேர்வு நடந்தது. காலை 9 மணிக்கு துவங்கிய தேர்வு 12.30 மணி வரை நடந்தது.
Tags:
Postgraduate Medical Studies NEED Exam Nationwide 2 lakh people முதுநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வு நாடு முழுவதும் 2 லட்சம் பேர்மேலும் செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலின் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் தெருவுக்கு 3 பேர் என 300 இடங்களில் தொற்று பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சமூக நலன், மகளிர் உரிமை துறையில் 3 திட்டங்களுக்கு ரூ.7.34 கோடி நிதி ஒதுக்கி அரசாணை
உள்ளகரத்தில் மெட்ரோ பணிக்காக தோண்டிய பாதாள சாக்கடையில் மண் சரிந்து தொழிலாளி பலி
சாலையோரம் வசிப்பவர்கள் இரவு நேர காப்பகங்களை பயன்படுத்த அறிவுரை சென்னை மாநகராட்சியில் புதிதாக 28 நகர்ப்புற வீடற்றோர் காப்பகம்: பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;