பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
2022-05-22@ 01:57:24

பூந்தமல்லி: பருவமழை தொடங்குவதற்குள் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பூந்தமல்லி பைபாஸ் சாலை, புதுத்தெரு உள்ளிட்ட 21 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் கட்டப்படும் மழைநீர் கால்வாய் பணிகள் மற்றும் கால்வாய் தூர்வாறும் பணிகளை நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘பைபாஸ் சாலையில் உள்ள கால்வாய் அடைப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சரிசெய்யப்பட்டது. பருவமழை தொடங்குவதற்குள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் கால்வாய்களும் தூர்வாரப்படும். தெருக்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார். இதில் பூந்தமல்லி நகர்மன்ற துணை தலைவர் ஸ்ரீதரன், ஆணையர் நாராயணன், பொறியாளர் நடராஜன், மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, மாவட்ட பிரதிநிதி சுதாகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Tags:
Monsoon Precaution Rainwater Canal Rehabilitation Work Mayor Inspection பருவமழை முன்னெச்சரிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி நகர்மன்ற தலைவர் ஆய்வுமேலும் செய்திகள்
ஜூலை 1ம் தேதி முதல் கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: புதுச்சேரி நகராட்சி அதிரடி
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்கள்: பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் முறையாக பெண் கண்டக்டர் நியமனம்: ஆர்வமுடன் பணியாற்றுவதாக நெகிழ்ச்சி
புதுகை அருகே ஏர் கலப்பையுடன் விவசாயி உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
பலத்த காற்று வீசுவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ அணைப்பதில் சிக்கல்: 3வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் 7 இடங்களில் வேகத்தடை அமைப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!