சிபிஐ அதிகாரிகளை தடுத்த கட்சி தொண்டர்களுக்கு பளார் விட்ட ரப்ரிதேவி
2022-05-22@ 01:42:08

பாட்னா: சிபிஐ அதிகாரிகளை தடுத்த தனது கட்சி தொண்டர்களின் கன்னத்தில் லாலுவின் மனைவி ரப்ரிதேவி அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயில் வேலை வாங்கி கொடுப்பதற்காக, முக்கிய இடங்களில் உள்ள நிலங்களை லஞ்சமாக வாங்கி கொண்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் அவருக்கும், குடும்பத்தினருக்கும் சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
பாட்னா இல்லத்தில் லாலுவின் மனைவியும், இம்மாநில முன்னாள் முதல்வருமான ரப்ரிதேவியிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், விசாரணை முடித்து வெளியே சென்ற சிபிஐ அதிகாரிகளை ராஷ்டிரிய ஜனதா தள நிர்வாகிகள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதை பார்த்து ஓடிய வந்த ரப்ரிதேவியும், லாலுவின் மூத்த மகன் தேஜஸ்வி யாதவும் தொண்டர்களை சமாதானம் செய்தனர். ஒரு கட்டத்தில் சில தொண்டர்களின் கன்னத்தில் ரப்ரி பளார் பளார் என அறையும் விட்டார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
CBI officer party volunteer Balar Vita Rabridevi சிபிஐ அதிகாரி கட்சி தொண்டர் பளார் விட்ட ரப்ரிதேவிமேலும் செய்திகள்
3000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது இந்தியா
மனைவி பிரசவத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.6 கோடியை இழந்த வங்கி மேலாளர்
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியிடம் ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்கா
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது
திருப்பதி கோயிலில் ரூ.4.30 கோடி காணிக்கை
மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட குழப்பம்: சிவசேனாவின் ஆட்சி, சின்னம் பறிபோகும் அபாயம்; இன்று மீண்டும் கூடியது செயற்குழு கூட்டம்; என்ன செய்ய போகிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!