ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை
2022-05-22@ 01:27:40

சேலம்: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு அடிவாரத்திலிருந்து 18வது கிலோ மீட்டரில், சுமார் 20 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று மலைப்பாதையில் சரிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் போக்குவரத்தில் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நெடுஞ்சாலை துறையினர் வந்து 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் ராட்சத பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள பள்ளத்தில் ராட்சத பாறை தள்ளி விடப்பட்டது. ஏற்காட்டில் கோடை விழா ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒருநாள் முன்கூட்டியே வரும் 25ம் தேதி தொடங்குகிறது. எனவே, கோடை விழாவிற்காக ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், எச்சரிக்கையுடன் மலைப்பாதைகளில் பயணிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட காலாவதி மருந்துகள்; ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: செல்வப்பெருந்தகை
கீழவைப்பார், சிப்பிகுளம் கடற்பகுதியில் மேக்காற்று மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பும் மீனவர்கள்
ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!!
ஓட்டப்பிடாரம் அருகே கோவை சென்ற ஆம்னி பஸ் எரிந்து சேதம்: பயணிகள் உயிர் தப்பினர்
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்காட்டில் 14 நாட்களில் மட்டும் 47 ஆயிரம் மதுபாட்டில் சேகரிப்பு
ராஜபாளையத்தில் அதிகாலையில் பரபரப்பு..ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ.: ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!