ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்கள் 150 பேருக்கு பணி நியமன ஆணை
2022-05-21@ 01:18:34

மதுராந்தகம், மே 21: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 150 பேருக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கம்ப்யூட்டர் துறை தலைவர் ஜெ.செந்தில்குமார் வரவேற்றார். முதல்வர் தமிழ்வேந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் டிப்ளமோ இறுதியாண்டு மாணவர்கள் 150 பேர் குறைந்தபட்ச சம்பளம் ஆண்டுக்கு ரூ.1.8 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.3.6 லட்சம் வரை பெறுவதற்கு சுமார் 20 நிறுவனங்கள் மூலமாக இந்த வேலை வாய்ப்பினை மாணவர்கள் பெற்றனர். அதற்கான பணி நியமன ஆணையை, கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார், மாணவர்களுக்கு வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். விழாவில் கல்லூரி துறைத் தலைவர்கள் வெங்கட சுப்பிரமணியன், நித்யானந்தம், இளங்கோவன், பிரபு, இளவழகன், ஹரிகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் பட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
விளாத்திகுளத்தில் ஒரே நேரத்தில் 2 கன்றுகுட்டி ஈன்ற பசு
சிதம்பரம் கோயிலில் அவமதிப்பு விவகாரம்; நடராஜரும்...நானும்... இடையில் நாரதர்கள் வேண்டாம் கவர்னர் தமிழிசை பதிலடி
திசையன்விளை பெரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
ஆனி சுவாதி உற்சவத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் இன்று காலை செப்பு தேரோட்டம்; பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
மாணவியை கடத்தி வாலிபருக்கு திருமணம்; 2 பெண்கள் கைது!
பக்ரீத் பண்டிகையை யொட்டி ஒட்டன்சத்திரம் ஆட்டுசந்தையில்; 2 கோடி ரூபாய்க்கு விற்பனை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..