ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்கள் 150 பேருக்கு பணி நியமன ஆணை
2022-05-21@ 01:18:34

மதுராந்தகம், மே 21: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 150 பேருக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கம்ப்யூட்டர் துறை தலைவர் ஜெ.செந்தில்குமார் வரவேற்றார். முதல்வர் தமிழ்வேந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் டிப்ளமோ இறுதியாண்டு மாணவர்கள் 150 பேர் குறைந்தபட்ச சம்பளம் ஆண்டுக்கு ரூ.1.8 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.3.6 லட்சம் வரை பெறுவதற்கு சுமார் 20 நிறுவனங்கள் மூலமாக இந்த வேலை வாய்ப்பினை மாணவர்கள் பெற்றனர். அதற்கான பணி நியமன ஆணையை, கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார், மாணவர்களுக்கு வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். விழாவில் கல்லூரி துறைத் தலைவர்கள் வெங்கட சுப்பிரமணியன், நித்யானந்தம், இளங்கோவன், பிரபு, இளவழகன், ஹரிகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் பட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை: கோர்ட்டில் சரணடைந்த மாமனாரை கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு.! இன்று உடல் பிரேத பரிசோதனை
காஞ்சிபுரம் அருகே அதிமுக பிரமுகரின் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி பலி: 25 பேர் படுகாயம்
கோடை உழவு செய்தால் மண் வளம், விளைச்சல் பெருகும்-விவசாயிகளுக்கு வழிகாட்டும் வேளாண் அதிகாரிகள்
சிப்காட் அரசு பள்ளியில் விழா மாணவர்களின் கல்வி நலனில் பெற்றோருக்கும் அதிக பொறுப்பு-வட்டார கல்வி அலுவலர் பேச்சு
சீசன் துவங்கியதால் வாட்டர் ஆப்பிள் வரத்து அதிகரிப்பு-கிலோ ரூ.240க்கு விற்பனை
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ₹90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!