தமிழகத்தில் கள்ளச்சாராயம் போலி மதுவை ஒழிக்க நடவடிக்கை: எடப்பாடி கோரிக்கை
2022-05-21@ 01:10:03

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மெரினா கடற்கரை சாலையில், காவல் துறை தலைவராக டிஜிபி அலுவலகம் எதிரில் உள்ள கடற்கரை மணலில் எண்ணிலடங்கா கள்ளச்சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காவல் துறைக்கு தெரியாமல் இவ்வளவும் புதைத்து வைக்க முடியாது.
இது தொடர்பாக ஒன்றிரண்டு பெண்களை கைது செய்து, கணக்கு காட்டி பிரச்னையின் தீவிரத்தை மூடி மறைக்க காவல் துறை முயல்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படும் என்று தாய்மார்கள் அஞ்சுகிறார்கள். தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், அப்பாவி மக்களின் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தமிழக தாய்மார்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அதிமுக போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்த பகுதியில் குடிமகன்கள் அட்டகாசம்: பயணிகள் அவதி
காலில் லுங்கி மாட்டி கீழே விழுந்தவர் பலி
பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோயிலில் குடமுழுக்கு விரைவில் நடைபெறும்; அமைச்சர் சேகர்பாபு தகவல்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை, இனி நான் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி டுவிட்டர் பக்கம் மாற்றம்
ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 1.50 லட்சம் ஒப்படைப்பு; டிரைவருக்கு பாராட்டு
மருத்துவமனையில் உள்ள சகோதரனை பார்க்க அனுமதி மறுப்பு, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற; போதை வாலிபர்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்