ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 150 ரன்கள் குவிப்பு: மொயீன் அலி அதிரடி
2022-05-20@ 21:49:14

மும்பை: மும்பை பிரபோர்னே மைதானத்தில் இன்று நடைபெறும் 68-வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன. பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறினாலும் ஆறுதல் வெற்றிக்காக சென்னை அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் கான்வே களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கெய்க்வாட் 2 ரன்கள் எடுத்து போல்ட் ஓவரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி அதிரடி காட்ட தொடங்கினார். குறிப்பாக மொயீன் அலி ஒரே ஓவரில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரிகள் விளாசினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மொயீன் அலி 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக குறைந்த பந்துகளில் 50 ரன்கள் எடுத்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு பிறகு உள்ளார்.
கான்வே, ஜெகதீசன் மற்றும் ராயுடு ஆகியோர் பெரிதாக சோபிக்காத நிலையில் அடுத்து வந்த கேப்டன் தோனி 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சஹால் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து ஆடிய மொயீன் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் அவுட் ஆனார். இதன் மூலம் சென்னை அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது. 151 ரன்களை இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.
மேலும் செய்திகள்
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி
ரோஹித்சர்மாவுக்கு கொரோனா; கடைசி டெஸ்டில் களமிறங்குவது சந்தேகம்
அயர்லாந்துடன் இன்று முதல் டி20; 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு; வெற்றி மட்டுமே ஒரே நோக்கம்.! கேப்டன் ஹர்திக்பாண்டியா பேட்டி
டிஎன்பிஎல் கிரிக்கெட்; சேலத்தை வீழ்த்தியது நெல்லை.! கோவை-திண்டுக்கல் இன்று மோதல்
தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து விலகியது சீன அணி
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று தொடக்கம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!