தாழக்குடி- பீமநகரி சாலையில் அத்துமீறும் டாரஸ் லாரிகள்
2022-05-20@ 19:20:20

நாகர்கோவில்: தாழக்குடி- பீமநகரி சாலையில் அத்துமீறும் டாரஸ் லாரிகளால் சாலைகள் பழுதாகி, விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குமரி வழியாக கேரளாவிற்கு தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் கேரளாவிற்கு விதிமுறைகளை மீறி அதிக பாரம் மற்றும் அதி வேகத்துடன் செல்கின்றன. இதில் பல லாரிகள் இறச்சக்குளம், வீரநாராயணமங்கலம் பீமநகரி வழியாக நாக்கால் மடம் விலக்கு வழியாக செல்கின்றன. ‘
தாழக்குடி- பீமநகரி சாலையில் ஒரு புறம் குளமும், மறுபுறம் வயல்வெளிகளும் காணப்படுகின்றன. இதனால், இந்த சாலையில் குறிப்பிட்ட பாரத்திற்கு மேல் வேகமாக டாரஸ் லாரிகள் செல்வதால், சாலைகள் பழுதடைந்து குளம் வயலில் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழக்குடி அருகே திருப்பத்தில் கனரக லாரி பழுதாகி ஒரு நாள் முழுவதும் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் திணறின. குறுகிய சாலைகளில் வேகமாக வரும் இந்த டாரஸ் லாரிகளால் விபத்து ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே இச்சாலையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் லோடு ஏற்றி இருக்க கனரக லாரிகள் செல்ல முடியாதபடி இரும்பு கம்பிகள் அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மீட்பு பணியில் மந்தம்: கடற்கரையில் மயக்க நிலையில் நான்கு மணி நேரமாக உயிருக்கு போராடும் இலங்கை அகதிகள்
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!: பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய சிப்பெட் மையம் அமைக்கப்படும் :ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி!!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி: ராமேஸ்வரம் கடற்கரையில் மயங்கிய நிலையில் கணவன், மனைவி தஞ்சம்..!!
பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் குடோனில் தீ: பல லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் நாசம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!