வெம்பக்கோட்ைட அகழாய்வில் புகைபிடிப்பான் கருவி கண்டெடுப்பு
2022-05-20@ 19:18:51

சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நேற்று நடந்த அகழாய்வில் புகைபிடிப்பான் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை தோண்டப்பட்ட 5 குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணாலான விளையாட்டு வட்டச்சில்லுகள், சூதுபவளம், பானை, பொம்மைகள், அகல்விளக்குகள், விலங்குகளின் எலும்புகள் ஆகியவை கிடைத்தன. சில தினங்களுக்கு முன் 6வது குழியில் நடந்த அகழாய்வில், சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கருவி, பானைகள் முன்னோர் பயன்படுத்தியதற்கான அடையாளமாக ஏராளமான பானை ஓடுகள் கிடைத்தன.
நேற்று நடந்த அகழாய்வில் மீண்டும் டெரகோட்டா களிமண்ணாலான புகைபிடிப்பான் கருவிகிடைத்துள்ளது. இது அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க தினமும் பொருட்கள் கிடைத்தபடி உள்ளன. முன்னோர் பயன்படுத்திய புகைபிடிப்பான் கருவி நேற்று கிடைத்துள்ளது. இது கலைநயமிக்கதாக உள்ளது. நமது முன்னோர் கலைநயமிக்க பொருட்களை வடிவமைப்பதில் திறமைசாலிகள் என்பதற்கு இது சான்றாகும்’ என்றார்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய சிப்பெட் மையம் அமைக்கப்படும் :ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி!!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி: ராமேஸ்வரம் கடற்கரையில் மயங்கிய நிலையில் கணவன், மனைவி தஞ்சம்..!!
பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் குடோனில் தீ: பல லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் நாசம்
மணலி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: பொதுமக்களுக்கு கண்ணெரிச்சல், மயக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
ஆவடி காவல் ஆணையரகத்தில் காவலர் உணவுப்படி 3 மாதமாக நிலுவை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!