தங்கம் வாங்குறது ரொம்ப கஷ்டம்... வாங்க முடியாத உச்சத்தில் விலை : ஒரு சவரன் ரூ.248 உயர்ந்து ரூ.38,288 விற்பனை!!
2022-05-20@ 09:42:39

சென்னை : அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.ஏதோ ஒரு நாள் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இதனால் நகை வாங்கும் பெரும் சிரமத்தில் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி தங்க விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.38,040-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை 2வது நாளாக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 அதிகரித்து ரூ.4,877 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,846 ரூபாயாக இருந்தது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 248 ரூபாய் உயர்ந்து 38,288 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 65.90 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இன்று தங்கம் வாங்க சரியான நாள்... சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை..!!
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனை... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்தது!!
இறக்குமதி வரி அதிகரிப்பை தொடர்ந்து தங்கம் சவரனுக்கு ரூ.1,016 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்வு.: சவரன் ரூ.38,480 -க்கு விற்பனை
ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை: வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ரூ187 குறைப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!