துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு விழா: மேடையில் தவறி விழுந்த உளவுத் துறை டிஎஸ்பி சாவு
2022-05-20@ 01:00:17

திருமலை: ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது விழா மேடையில் இருந்து தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி பரிதாபமாக இறந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மாதப்பூரில் தெலுங்கு திரைப்பட கவிஞர் சிறிவெண்ணெலா சீதாராம சாஸ்திரியின் நூல் வெளியீட்டு விழா இன்று ஷில்பகலா ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பங்கேற்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவுத்துறை இயக்குனரும் டிஎஸ்பியுமான குமார் அம்மிரேஷ் மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, உளவுத்துறை டிஎஸ்பி குமார் அம்மிரேஷ் மேடையில் இருந்து திடீரென கால்தவறி பள்ளத்தில் விழுந்தார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2 போலீஸ்காரர்கள் மர்ம சாவு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே முட்டிக்குளங்கரை என்ற இடத்தில் கேரள போலீஸ் ஆயுதப்படை முகாம் உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த மோகன்தாஸ், அசோகன் என்ற 2 போலீஸ்காரர்களை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. அவர்கள் முகாமுக்கு அருகே உள்ள வயல்வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். 2 பேரும் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், அதற்கான எந்த தடயங்களும் அங்கு இல்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாலக்காடு மாவட்ட எஸ்பி விஸ்வநாத் தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகள்
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு: கேரள மாஜி அமைச்சர் மீது வழக்கு
கர்நாடகாவில் கனமழை: மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாப பலி
மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி
டாக்டரை கரம் பிடித்தார்; பஞ்சாப் முதல்வர் திருமணம் எளிமையாக நடந்தது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு
உதய்பூரில் நுபுர் சர்மாவை ஆதரித்ததால் கொலை செய்யப்பட்ட டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை: ராஜஸ்தான் அரசு முடிவு
திருப்பதி 2-வது மலைப்பாதையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு; பக்தர்கள் அவதி
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..