SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு விழா: மேடையில் தவறி விழுந்த உளவுத் துறை டிஎஸ்பி சாவு

2022-05-20@ 01:00:17

திருமலை: ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது விழா மேடையில் இருந்து தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி பரிதாபமாக இறந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மாதப்பூரில் தெலுங்கு திரைப்பட கவிஞர் சிறிவெண்ணெலா சீதாராம சாஸ்திரியின் நூல் வெளியீட்டு விழா இன்று ஷில்பகலா ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பங்கேற்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவுத்துறை இயக்குனரும் டிஎஸ்பியுமான குமார் அம்மிரேஷ் மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, உளவுத்துறை டிஎஸ்பி குமார் அம்மிரேஷ் மேடையில் இருந்து திடீரென கால்தவறி பள்ளத்தில் விழுந்தார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2 போலீஸ்காரர்கள் மர்ம சாவு: கேரள  மாநிலம், பாலக்காடு அருகே முட்டிக்குளங்கரை என்ற இடத்தில் கேரள போலீஸ்  ஆயுதப்படை முகாம் உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த மோகன்தாஸ், அசோகன் என்ற 2 போலீஸ்காரர்களை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. அவர்கள் முகாமுக்கு அருகே உள்ள  வயல்வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். 2 பேரும் மின்சாரம் தாக்கி  இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், அதற்கான எந்த  தடயங்களும் அங்கு இல்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாலக்காடு மாவட்ட எஸ்பி விஸ்வநாத் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்